நிச்சயதார்த்தம் பொன் உருக்கி விடுதல்
காலையில் வீட்டுத் தெய்வம், குலதெய்வத்துக்கு மஞ்சள் துணியில் ரூபாய் முடிந்து பத்தி, சூடம் ஏற்றவும்.
உப்பு
மஞ்சள் பிள்ளையார்
நிறைகுடம்
மாப்பிள்ளைக்கு தண்ணீர்
திருநீறு, சந்தனம், குங்குமம் எடுத்துக் கொள்ளவும்
ஐயர் லிஸ்ட் இருந்தால் எடுத்துக் கொள்ளவும்
தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு
படி நெல், மஞ்சள் நனைத்த துணி
ஊதுபத்தி, சூடம், தீப்பெட்டி
அரிவாள், தேங்காய் உடைக்க சட்டி எடுக்கவும்.
ஆசாரிக்கு நெல்லை எடுத்து போக மஞ்சப்பை தட்சிணை எடுத்துக் கொள்ளவும்.
முதலில் ஆசாரி, மாப்பிள்ளையை உட்கார வைத்து, தேங்காய் உடைத்து, பத்தி, சூடம் ஏற்றி, பொன்னை உருக்கி, பூஜை செய்து, தங்கத்தை மஞ்சள் துணியில் முடிந்து எடுத்து கிளம்புவார். தேங்காய், பழம், நெல், வெற்றிலை, பாக்கு, தட்சிணை கொடுக்கவும். பின் அவர் கிளம்பும் பொழுது வாசலில் 2 பெண்கள், நிறைகுடம் தண்ணீர் வைத்து நிற்க வேண்டும்.
கடையில் பொன் உருக்கி விட்டால் நிச்சயதார்த்தம் மட்டும் பண்ணலாம்.
நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சின்னஞ்சிறு தாலி போட்டுக் கொள்ளலாம்.
முகூர்த்த நெல் சீர்
பெண் வீடு எடுத்து செல்ல வேண்டும்
தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பால் சட்டி – 1, பூ.
குங்குமம் கூடு, மஞ்சள் கிழங்கு – எண்ணிக்கை விருப்பப்படி.