நிச்சயதார்த்த சீர் வகைகள்
மஞ்சள் கிழங்கு 11
தேங்காய் 11
செவ்வாழை 11
பச்சை பழம் 11
கொய்யா 11
மாம்பழம் 11
திராட்சை (கருப்பு)
திராட்சை (பச்சை)
ஆப்பிள் 11
ஆரஞ்ச் 11
கொடை ஆரஞ்ச் 11
மலைப்பழம் 101
கல்கண்டு 1/2 கிலோ
பேரீச்சை 1/2 கிலோ
உலர் திராட்சை 1/2 கிலோ
முந்திரி 1/2 கிலோ
பாதாம் 1/2 கிலோ
சார பருப்பு 1/2 கிலோ
சீனி 1/2 கிலோ
மிட்டாய் வகைகள்
வெற்றிலை, பாக்கு
பட்டு வேஷ்டி
சட்டை பனியன்
உள்ளாடை, கைக்குட்டை
கடிகாரம்
செயின்
பிரேஸ்லெட் (இஷ்டப்பட்டால்)
பெரிய மாலை. 2
துணை மாலை 2
சம்பந்தி மாலை 4
கைக்கேடயம் 4
தட்டுக்கு பூ
வெள்ளி கூடு 1
பால் சட்டி 1
பஞ்ச பாத்திரம் 1 செட்
சீருக்கு ரூ.
முடியும் பணம் இருந்தால் மஞ்சள் துணி நனைத்து எடுத்துக் கொள்ளவும்.
நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளையை, கோலத்தில் உட்கார வைத்து, வேஷ்டி-சட்டையை எடுத்துக் கொடுக்கவும். மாப்பிள்ளை வந்தவுடன் சந்தனம் பூசி, மாலை, கைக்கேடயத்தைக் கட்டி, வாட்சோ அல்லது கைச் செயினோ, செயினோ போட்டு விடவும். அய்யர் இருந்தால் பூஜை செய்து, தேங்காய் உடைத்து, சூடம் ஏத்தி, சம்பந்திகள் இருவரும் சந்தனம் பூசி, மாலை போட்டு, தேங்காய்-பழத் தட்டு மாற்றிக் கொள்ளவும். பெண்ணின் அப்பா, முடியும் பணம் எடுத்து, மாப்பிள்ளை வேட்டியில் முடிந்து விடவும் பின் எல்லோரிடமும் மாப்பிள்ளை ஆசீர்வாதம் வாங்கவும்.
பெண் வந்திருந்தால் மனையில் உட்கார வைத்து சேலையைக் கொடுத்து, உடுத்தச் சொல்லவும். பின் உட்கார வைத்து மாமியார் அல்லது நாத்தனாரோ சந்தனம் பூசி கைகளில் வரி போட்டு, குங்குமம் வைத்து தலையில் பூ வைக்கவும். பின் ஆரத்தி எடுத்து பாலும், பழமும் கொடுக்கவும். எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கவும்.
பெண் ஊரில் இருந்தால் இதே மாதிரி செய்யவும். பின் சாப்பாடு போட்டு, பெண்ணுக்கு ரூபாய் கொடுக்கவும். பெண் வீட்டிற்கு உளுந்து, வடகம், பாசிப்பருப்பு, அப்பளகட்டு, ஒரு மஞ்சள் பையில் கொடுத்து அனுப்பவும்.
பெண் வீட்டாருக்கு தேங்காய் வைத்ததைப் பொறுத்து எல்லாவற்றையும் திருப்பித் தரவும்.
சாப்பாட்டிற்கு 5 அடுக்கு கேரியர், சாதத்திற்கு தூக்கு, நெய்க்கு தூக்கு.
நிச்சயம்
மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு செய்ய வேண்டியது.
புடவை, சட்டை, பாவாடை டவல், டிபன் கேரியர், சாதத்துக்கு தூக்கு, நெய்க்கு தூக்கு, சாப்பாட்டுக்கு ரூபாய் அப்பளக்கட்டு, உளுந்து வடகம், பாசிப்பருப்பு, மஞ்சப்பையில் போட்டு கொடுக்கவும். வெளியூரிலிருந்து வந்தால் பஸ் அல்லது காருக்கு ரூபாய் கொடுக்கவும்.
தேங்காய், பழம் திருப்பும் போது வெள்ளிக் கூடு தர வேண்டும்.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பு வீட்டில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, ரூபாய் முடிந்து போட்டு, ஊதுபத்தி, சூடன் காண்பிக்கவும்.
பத்திரிக்கை வந்த உடன் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று, தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்யவும். நிச்சயம் நடக்கும் போது திருகையில் சுமங்கலிகள் கருப்பு உளுந்து உடைக்கவும். அதை மறுநாள் உளுந்து வடகம் போடவும்.
நிச்சயத்தன்று உள்ளூராக இருந்தால் பெண் வீட்டாரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று பத்திரிக்கை வைத்து அர்ச்சனை செய்யவும். பின் இரவு அவர்களுக்கு விருந்து வைக்கவும்.