கலத்துக்கு சோறு போடும் முறை :
மாப்பிள்ளையை உட்கார வைத்து, பெண்ணை முக்காலியை வைத்து இலையில் ஸ்வீட் வைத்து, பின் காய்கறி எல்லாம் வைத்து, சாதம் போட்டு, நாத்தனார் எடுத்துக் கொடுக்க 3 முறை இலை போட்டு செய்ய வேண்டும். பின் அதை மடித்து ஓலைப் பெட்டியில் வைக்க வேண்டும். பின் வெள்ளித்தட்டு டம்ளர் வைத்து நாத்தனார் எடுத்துக்கொடுக்க பெண் சாதம் போட வேண்டும். அதை மாப்பிள்ளை பிசைந்து, தவழும் கிருஷ்ணருக்கு ஊட்டி விட்டு, பெண்ணுக்கு ஒரு வாய் ஊட்டி விடவும். பிறகும் பெண்ணையும் அமர்த்தி சாதம் போடவும். சாப்பிடும் முன் வெற்றிலை, பாக்கு வைத்து ரூ.101 அல்லது பவுன் வைத்து மாப்பிள்ளைக்கு கொடுக்கவும்.