மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலூர் நம்மவர் A.V.K.C சமூகத்தினர் நடத்தும் ஆன்மீகத்தொண்டு விபரம்
1. சித்திரை முதல் பங்குனி மாதம் வரை மேலூர் டவுன் கோட்டை கிணறு விநாயகர் கோவிலில் அன்றாட பூஜை மற்றும் சதுர்த்தி பூஜை டிரஸ்ட் நடத்தி வருகிறது.
2. வைகாசி மாதம் திருவாதவூர் திருமறை நாதர் சுவாமி 5ம் திருநாள் A.V.K.C மண்டகப்படி நடத்திவருகிறது.
3. வைகாசி விசாகத்தன்று சிவன்கோவிலில் வை.மாரியப்பன் செட்டியார் & சன்ஸ் – முருகப்பெருமானுக்கு பால்குடம் அபிஷேகம் நடத்துகிறார்கள்.
4. ஆனி மாதம் உத்திர நட்சித்திரத்து அன்று வீ.க.மகாலிங்கம் செட்டியார் வகையறா சிவன்கோவிலில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம் நடத்துகிறார்கள்.
5. ஆவணி மாதம் A.V.K.C டிரஸ்ட் – ஆவணி அவிட்டம் பூணூல் போடுதல் நடத்திவருகிறது.
6. புரட்டாசி மாதம் 9 நாட்கள் நவராத்திரி திருவிழா A.V.K.C மண்டபத்தில் நடைபெறுகிறது.
7. ஐப்பசி மாதம் சிவன்கோவிலில் கந்த சஷ்டி முதல் நாள் விழாவை S.சுசீந்திரன் செட்டியார் அவர்கள் நடத்துகிறார்கள்.
8. ஐப்பசி மாதம் சிவன் கோவிலில் கந்த சஷ்டி 3ம் நாள் விழாவை மிக்சர் கடை மாரியப்பன் செட்டியார் அவர்கள் நடத்துகிறார்கள்.
9. ஐப்பசி மாதம் முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி கடைசி நாள் அன்னப்பாவாடை A.V.K.C டிரஸ்ட் சார்பாக நடைபெறுகிறது.
10. ஐப்பசி மாத பவுர்ணமி அன்னாபிஷேகம், நெல்லி மரத்து பூஜை சிவன் கோவில் சு.முத்துச்சாமி செட்டியார் & சன்ஸ் நடத்துகிறார்கள்.
11. கார்த்திகை மாதம் மேலூர் சிவன் கோவிலில் 2வது சோம வாரம் பூஜை M.மாரியப்பன் செட்டியார் & சன்ஸ் நடத்துகிறார்கள்.
12. கார்த்திகை மாதம் மேலூர் சிவன் கோவிலில் 3வது சோம வாரம் பூஜை திருமதி S.அமுதா ஜெயபால் நடத்துகிறார்கள்.
13. கார்த்திகை மாதம் மேலூர் சிவன் கோவிலில் கடைசி சோம வார பூஜை வை. மாரியப்பன் செட்டியார் & சன்ஸ் நடத்துகிறார்கள்.
14. மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடராஜ பெருமானுக்கு, S.சுசீந்திரன் செட்டியார் அவர்கள் நடத்துகிறார்கள்.
15. மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி (பெரிய அஷ்டமி பிரதட்சணம்) சிவன் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு - A.V.K.C டிரஸ்ட் நடத்தி வருகிறார்கள். அன்று மதியம் A.V.K.C மண்டபத்தில் அன்னதானம் நடைபெறுகிறது.
16. மார்கழி மாதம் அதிகாலை பூஜை (30 நாட்கள்) C. மாரியப்பன் செட்டியார் & பிரதர்ஸ் நடத்துகிறார்கள்.
17. தை மாதம் ரோகிணி நட்சத்திரம் சமாது குரு பூஜை மற்றும் அன்னதானம் A.V.K.C டிரஸ்ட் மூலம் நடைபெறுகிறது.
18. மாசி மாதம் கோட்டை கிணறு விநாயகர் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
19. மாசி மாதம் சிவன்கோவிலில் மகா சிவராத்திரி பூஜை M.மாரியப்பன் செட்டியார் & சன்ஸ் நடத்துகிறார்கள்.
20. மேலூர் வட்டம் சூரக்குண்டு கிராமம் சின்னடக்கி அம்மன், பெரியடக்கிஅம்மன் ஆண்டி அரசு கோவிலில் பொங்கல் மாவிளக்கு கரும்புதொட்டில் முளைப்பாரி ஆக்கி படைத்தல் பூஜை நடைபெறுகிறது.
21. மேலூர் ஊர்காவலன் சுவாமி கோவிலில் கரகத்தன்று மாவிளக்கு திருவிளக்கு பூஜை முளைப்பாரி எடுத்தல் ஆகிய பூஜை நடைபெறுகிறது.
22. பங்குனி மாதம் சிவன்கோவிலில் பங்குனி உத்திரம் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் சிவ.அருணாசலம் செட்டியார் வகையறா நடத்துகிறார்கள்.
23. மேலூரில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் 19ம் நாள் நோன்புக் கஞ்சி 1930ம் வருடம் முதல் கட்டிக்குளம் மு.ஆவடைசெட்டியார் வகையறா நடத்தி வருகிறார்கள்.
தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது